இது பள்ளியா.. இல்லை சீட்டுக் கம்பெனியா?..

புதன், 31 மே 2017 (13:59 IST)
கோடைக்கால விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் தனது அடுத்த வகுப்பிற்கு முன்னேறும் மனநிலையில் இருக்கிறார்கள்.


 

 
தமிழ்நாட்டில் வருகிற 7ம் தேதி அனைத்து பள்ளிக்களும் திறக்கப்படுகின்றன. எனவே, தங்கள் பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்க்கும் வேலையில் தனியார் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
 
இந்நிலையில், ஒரு தனியார் பள்ளியின் விளம்பர பலகை சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது.  அதில், 1 முதல் 5 வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு  1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் அல்லது மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வருடத்திற்கு பணம், பீரோ என பல சலுகைகளை அந்த பள்ளி வழங்கியுள்ளது.
 
இதைக் கண்ட பலரும், இது பள்ளிக்கூடமா இல்லை சீட்டுக் கம்பெனியா? கல்வியை இவ்வளவு தரக்குறைவாக விளம்பரப்படுத்தி வருமானம் சம்பாதிக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்