பணம் இல்லாததால் ஏடிஎம்களை உடைத்த மர்ம நபர்கள்

ஞாயிறு, 20 நவம்பர் 2016 (20:15 IST)
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்-ல் பணம் இல்லாததால், அடையாளம் தெரியாத சில நபர்கள் ஆத்திரமடைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தனர்.


 

 
பழைய ரூபாய் மாற்றம் அறிவிப்புகு பின் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கூட்ட நெரிசலில் காத்து நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
 
நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத சூழலே நிலவுகிறது. சில ஏடிஎம்களில் மட்டும் பணம் கிடைக்கிறது. அதுவும் கூட்டம் காரணமாக சுமார் 2 முதல் 3 மணி நேரத்தில் பணம் காலியாகி விடுகிறது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாததால், அடையாளம் தெரியாத சில நபர்கள் ஆத்திரமடைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்