தமிழக ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை: அன்புமணி கோரிக்கை

திங்கள், 8 பிப்ரவரி 2016 (05:30 IST)
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பாக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
 

 
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை, பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்.பியுமான  அன்புமணி சந்தித்தார்.
 
அப்போது, தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்நாட்டற்கு என மத்திய அரசு அறிவித்த ரயில்வே திட்டங்களை உடனே நிறைவேற்றுமாறு சுரேஷ் பிரபுவிடம் அன்புமணி கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை மீது பரிசீலனை செய்வதாக சுரேஷ் பிரபு உறுதி அளித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்