சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நினைவூட்டும் வகையில், 68 கிலோ ‘கேக்’ வெட்டி, கொண்டாடினர்.
இது தவிர, தமிழகம் முழுவதும் அன்னதான நிகழ்ச்சிகள், இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும், நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”திரு ஜெயலலிதா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிறைந்த உடல்நலத்தோடு நீண்டகாலம் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்துள்ளார்.