கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஜான் என்பவர் பாதிரியாராக வருகிறார்.
அவர், தான் அந்த சபைக்கு அடிக்கடி சென்று வரும்போது பாதிரியார் ஜான் ஒருநாள், தன்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்த வேண்டும் எனக்கூறி மிரட்டி கற்பழித்து விட்டார். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாதிரியார் ஜானை விசாரணைக்கு வரும்படி அழைத்தபோது, அவரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஜானுடன் வந்தவர்களை வெளியே செல்லும்படி காவல் துறையினர் கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிரியார் ஜான் தகராறில் ஈடுபட்டுள்ளார்.