இப்போது அதற்கும் பிரச்சனை எழுந்துள்ளது. இந்தியாவில் இந்த வருடம் சரியாக மழை பெய்யாத காரணத்தால், துவரம் பருப்பின் உற்பத்தி குறைந்து, அதன் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.
இதோடு உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது. விலை ஏறிய துவரம் பருப்பு இனி விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்று சில வியாபாரிகளின் கூறியிருப்பது பலரின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.