குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடியப்போகும் வேளையில் அவர் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்திருப்பது அரசியல் நோக்கர்களால் உற்றுப்பார்க்கப்படுகிறது. அரக்கோணம் ராஜாளி விமானப் படைத்தளத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் வந்தார்.
அங்கே சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சங்கராச்சாரியாருக்கு பாத பூஜை செய்ததாக தகவல்கள் வருகின்றன. இந்த பயணம் அரசு முறை பயணமாக இல்லாமல் பிரணாப் முகர்ஜியின் தனிப்பட்ட பயணமாக இது அறிவிக்கப்பட்டது.