பிரேமலதா சொன்னது என்னாச்சு.. அண்ணாச்சி? வைகோ ஆவேம்

வியாழன், 17 மார்ச் 2016 (00:34 IST)
தேமுதிக மகளிர் மாநாட்டில், திமுக குறித்த பிரேமலதாவின் கருத்து கருணாநிதி பதில் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னனதாக செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-
 
திமுக, அதிமுக, பாஜக, பாமக ஆகியவற்றுடன் மக்கள் நலக் கூட்டணி அமைக்கமாட்டோம் என நாங்கள் முதலிலேயே அறிவித்துவிட்டோம். அத்துடன், தேமுதிக, தமாகா ஆகியவற்றை மக்கள் நலக் கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்தோம். எங்கள் அழைப்பை அவர்கள் மறுக்கவே இல்லை.
 
இந்த நிலையில், தேமுதிக மகளிர் மாநாட்டில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை விஜயகாந்த்-ம், அவரது மனைவி பிரேமலதாவும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். மேலும், பிரேமலதா திமுக, அதிமுகவை தில்லுமுல்லு கட்சிகள் என விமர்சித்துள்ளார்.
 
திமுக மீதான விமர்சனத்துக்கு வழக்கமாக உடனே பதில் கூறும் கருணாநிதி, பிரேமலதாவின் கருத்துக்கு பதில் கூறாமல் மவுனமாக உள்ளாரே. ஒரு வேளை பிரேமலதா கூறியது சரியோ என அமைதியாக இருந்துவிட்டாரோ என்று ஆவேசம் காட்டியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்