இந்நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா பத்து மணி தாண்டிய பின்னரும் கூட்டத்தினர் கலையாமல் நின்றதால். மைக், ஒலிப்பெருக்கி எதுவும் இல்லாமல் சைகைகள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது, ஆனால் பிரேமலதா ஒலிப்பெருக்கி, மைக் இல்லாமல் சைகையில் பிரச்சாரம் செய்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல் துறையினரும், தேர்தல் அலுவலர்களும் விழிபிதிங்கி நின்றனர்.