கடந்த 14ஆம் தேதி திராவிடர் கழகத்தினர், சென்னையில் உள்ள பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், 21 பெண்கள், தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை இந்து மத முறைப்படி செய்துள்ளனர். பூஜைகள் செய்தும், சிவபுராணம் பாடியும் குளத்தில் இறங்கி ஈமச்சடங்கை செய்துள்ளனர். இதனை அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.