கும்பகோணம் துணை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலர் குருமூர்த்தி தலைமையில் அளித்த மனுவில், “நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் கீழத்தெருவில் உள்ள சேவுகராய அய்யனார் கோவிலில் அமைக்கப்பட்ட பிரபாகரன் சிலையை காவல்துறையினர் அகற்றி அதனை நிறுவிய மக்களை அச்சுறுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டுவது கண்டனத்துக்குரியது.
அந்த வகையில் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி பல்வேறு இன்னல்களை நீக்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தமிழர்கள் வீரராக போற்றுவதும், அவரை வழிபடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள கோவிலில் அவரின் சிலை அமைத்து வழிபட்டு வந்தனர். தற்போது அந்த சிலை அகற்றப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.