மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்: சீமான்

வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:31 IST)
மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க பிரபாகரன் பிறந்த தினமான, இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று சீமான் கூறியுள்ளார்.


 

 
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த தின விழாவை மாவீரன் தினமாக நாம் தமிழர் கட்சி கொண்டாடியது.
 
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஈழ விடுதலைக்கு எது தடைக்கல்லாக இருக்கிறது என்ற கேள்வியை நெஞ்சில் நிறுத்தி மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.
 
மாவீரர்களின் தியாகம் இந்த உலகத்தில் தமிழர் இறையாண்மை பகரும் ஈழம் என்ற தேசத்தை அடைந்தே தீரும்.
 
அந்த சூழலை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் இந்த மாவீரர் நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்