பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு 10,711கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
இதனால், கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஒதப்பை, மோவூர், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.