கருத்து கணிப்புகளை நம்பி திமுக இல்லை: மு.க.ஸ்டாலின் கருத்து

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (12:06 IST)
கருத்து கணிப்புகளை நம்பி திமுக அரசியல் நடத்தவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம் 2016 தேர்தல் குறித்து கருதுக்கணிப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டது.
 
இதில் அதிமுக வுக்கு அதிக ஆதரவு மக்கள் மத்தியில் இருப்பதாகவும் மீண்டும் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே முதலமைச்சராக வர வாய்ப்புள்ளதாகவும் திமுக இரண்டாம் இடத்திலே உள்ளது என கருத்துக்கணிப்பு வெளியிட்டது.
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், "திமுக கருத்து கணிப்புகளை நம்பி அரசியல் செய்வதில்லை. இதற்கு முன்னர் திமுக வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகணிப்புகள் வந்துள்ளன"  கன்று கூறினார்.
 
மேலும், திமுக மக்கள் பணிகள் செய்வதிலே கவனம் கொண்டுள்ளதாக ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்