சென்னை பல்கலை அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் இடைநீக்கம்

புதன், 26 ஆகஸ்ட் 2015 (16:16 IST)
சென்னை பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பயின்றுவரும் அனைத்து மாணவர்களையில் இடைநீக்கம் செய்யப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார். அரசியல் அறிவியல் துறை பேராசிரியராக இருந்த ராமு மணிவண்ணன் பூரண மதுவிலக்கு கோரி  மாணவர்களுடன் போராட்டம் நடத்தினார். இவரை பல்கலைகழகம் சமீபத்தில் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில் பல்கலைப் பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாகப் போராடியதாகக் கூறி அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் அனைவரையும் இடை நீக்கம் செய்து பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், விடுதியில் தங்கியிருக்கும் அரசியல் அறிவியல் மாணவர்கள் அனைவரும் தங்களது அறைகளை காலி செய்யவும் உத்தரவில் கூறியுள்ளார். மேலும் ,மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்