இந்த தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடம் சசிகலா ஆதரவாளர்கள் சோகத்திலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலும் திளைத்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு படி மேலே போய் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று 9.20 மணிக்கு வந்தார். அவருக்கு முன்பாக அவருக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரும் வந்திருந்தனர். இதன் பின்னர் சிறிது நேரத்தில் தீபா ஜெயலலிதா சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.