சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை பாராட்டி, ஜெயலலிதா படத்துடன், தனது படத்தையும் போட்டு, தனது ஊரில் உள்ள கடை வீதியில் பிளக்ஸ் போர்டு வைத்தார் எஸ்ஐ ரவி. இந்த தகவல் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பிலும் மின்னல் வேகத்தில் பரவியது.
இது குறித்து எஸ்ஐ ரவி விளக்கம் அளிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்போது, இந்த பேனரை, தான் வைக்கவில்லை என்றும், தனது நண்பர்கள் வைத்துள்ளதாகவும் விளக்கம் கொடுத்தார். ஆனால், அதில் உள்ள வாசகங்களை தானே எழுதியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இதனால், எஸ்ஐ ரவியை ஆயுதப் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். மேலும், அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.