இது குறித்து புதுக்கோட்டை போஸ் நகரில், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வேலையின்மை என்பது பெரும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. கடந்த 2011-ல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுபெற்றவர்களின் எண்ணிக்கை 73 லட்சம் பேர்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் நெல்லையில் 6 பேரும், துக்துக்குடியில் 8 பேரும் என 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அப்பாவிப் பொதுமக்களை அது தாக்கிவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் நடைபெற்ற சம்பவங்கள் இதற்கு சாட்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.