’இயக்குனராகிறார் கவிஞர் குட்டி ரேவதி’ - ஹீரோ யார் தெரியுமா?

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (11:57 IST)
குட்டி ரேவதி, இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர்.  


 


அவர் தமிழ் மேல் கொண்ட அன்பால் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். பின், ’காஞ்சனை’ என்ற திரைப்பட இயக்கத்தில் இணைந்து திரைப்படங்கள் குறித்து பேசவும், எழுதவும் ஆரம்பித்தார்.

ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய ரசாயன ரோஜாக்கள் என்ற ஆல்பத்துக்கும், மரியான் படத்திற்கும், நயன்தாரா நடித்த மாயா உள்பட பல படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

நீண்ட நாட்களாக சினிமா இயக்க வேண்டும் என்ற குட்டி ரேவதியின் லட்சியத்திற்கு, வாய்ப்பு இப்போது தான் அமைந்திருக்கிறது. இவர் இயக்கும் படத்தில், சமுத்திரகனி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

குட்டி ரேவதி ஒரு சித்த வைத்தியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்