கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசித்து முடிவு செய்யும். எங்கள் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை திட்டங்களுக்கு எதுவும் ஒதுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. அவர் நிதியினை மக்கள் திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளார்.
பாஜக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறதே என ராமதாசிடம் கேட்டபோது, அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்ததோடு, 'நாளை உங்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன்' என்றார்.