பள்ளிகொண்டாவில் பாமக வடக்கு மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் நின்ற 7 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மாநாட்டுக்கு வந்த பாமகவினர் உடைத்தனர்.
இதையடுத்து, கந்தனேரியைச் சேர்ந்த சாமி மகன் உதயகுமார் (23), செல்வராஜ் மகன் மணி (21), சம்பத் மகன் சிலம்பரசன் (21), சம்பத்குமார் மகன் கவியரசன் (32), தேவலாபுரத்தைச் சேர்ந்த மோகன் மகன் சுரேஷ் (32), தங்கவேல் மகன் சுப்பிரமணி (40) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பாமகவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.