ஆனால், பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு முயற்சிக்காமல் கலால் வரியைத் தாறுமாறாக நிர்ணயிப்பது கண்டனத்திற்கு உரியதாகும். இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு மக்கள் மீதான பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.