அதிமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு

புதன், 2 செப்டம்பர் 2015 (11:40 IST)
திருச்செந்தூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.   

திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக மாணவரணி தலைவர் ஆனந்தராமஜெயம் வீட்டில் இன்று அதிகாலை யாரோ மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. அதில் அவர் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டி சேதம் அடைந்தது. இது குறித்து புகார் அளித்த ஆனந்தராமஜெயம், தனக்கு அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் முத்துகுமார் என்பவருடன் முன் விரோதம் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்றும், இதை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறையினரிடம் கூறியிருக்கிறார்.

புகாரைப் பெற்ற டி.எஸ்.பி கோபால், இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் மீனா ஆகியோர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்