இதற்கிடையில் பீட்டா அமைப்பு பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்களும் பரவி வருகின்றது. இந்நிலையில் தமிழர்களின் ஏகோபித்த எதிர்ப்பை சமபாதித்து வைத்திருக்கும் பீட்டா இந்தியா அமைப்பு, தங்களை பற்றி பரவி வரும் தகவல்கள் பொய்யானவை என விளக்கமளித்துள்ளது.
பீட்டாவை விமர்சிப்பவர்கள் உண்மையை தெரிந்து கொள்ளாமல் குற்றம்சாட்டுவதாக பீட்டா இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. தங்கள் அமைப்பிற்கும் பீட்டா யுஎஸ்ஏ அமைப்பிற்கும் நேரடித் தொடர்பு கிடையாது என்றும், முக்கிய விசயங்களில் அவர்களது கருத்துகள் கேட்கப்படும் என்றும் பீட்டா இந்தியா குறிப்பிட்டுள்ளது.