விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை யாரும் மருத்துவமனையில் சேர்க்கவோ, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கவோ முன்வரவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை செல்போனில் புகைபடம் எடுத்து கொண்டிருந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அரை மணி நேரத்திற்கு பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், மோட்டார் சைக்கிள்களுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், சின்னகுட்டி மடுவை சேர்ந்த மைக்கேல்ராஜ் (21), சின்னவேலம்படுவை சேர்ந்த சத்தியராஜ் (21) ஆகிய 3 வாலிபர்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மைக்கேல்ராஜ், சத்யராஜ் ஆகிய 2 பேரும் இறந்தனர். வெங்கடேஷ் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.