தேமுதிக மக்கள் நல கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுகவில் சேர வேண்டும் எனவும் நேற்று போர்க்கொடி உயர்த்திய தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையிலான அணியை விஜயகாந்த் நேற்று நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் கட்சியானது பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என போட்டுடைத்தார். பிரேமலதாவால் கட்சி அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக கூட்டணிக்கு செல்லாமல், மக்கள் நல கூட்டணிக்கு தேமுதிக சென்றதற்கு பிரேமலதா தான் காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.