புதுக்கோட்டை மாவட்டம், அரசர்குளத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வருகை தந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் தான் உண்மையான மனிதநநேய மக்கள் கட்சி. எங்கள் பக்கம் தான் அனைத்து நிர்வாகிகளும் உள்ளனர். ஏற்கனவே, பொதுக்குழுவை கூட்டி இதை அறிவித்துவிட்டோம். ஆனால், மமகவின் முன்னாள் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தஞ்சாவூர் பொதுக்குழு நடத்தியதாக கூறப்படுவது சட்ட விரோதமான செயல் ஆகும்.