பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி முதன்முறையாக நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தார். நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், '20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வென்றுள்ளேன். விரைவில் நிறைய பேர் சிறைக்குச் செல்வார்கள்' என்று பதிவிட்டார்.
ஆளுநர் இப்போது ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கவேண்டும். சசிகலா பெங்களூருக்கு செல்கிறார். ஆனால் அவர் இப்போதும் கட்சியின் தலைவர்தான். ஓ.பி.எஸ். மீடியாவின் முதல்வர் வேட்பாளர். அவரிடம் போதுமான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இல்லை, என்று கூறியுள்ளார்.