சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டினார்கள்!? – பத்ம சேஷாத்ரி பள்ளி வழக்கில் திருப்பம்!

ஞாயிறு, 30 மே 2021 (09:25 IST)
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கில் கைதான நிலையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த விசாரணையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைக்காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்