எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு திரைப்பட தயாரிப்பாளர் மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் நடந்த விசாரணையில், ”எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கக் கூடாது என்று நிதிபதி கேள்வி எழுப்பியதை அடுத்து அவரிடம் விடிய விடிய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 14 மணிநேரத்தை தாண்டிய நிலையில், காவல்துறையினர் பச்சமுத்துவை கைது செய்துள்ளனர்.