தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன் என்று விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் போரட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசி வருகிறார். இனிமேல் அவர் விவசாயிகளை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். முடிந்தால் விவசாயிகளுக்காக பிரதமர் மோடியிடம் எடுத்து சொல்லி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க பாருங்கள், என கூறினார்.