இதனை தொடர்ந்து நேற்று இரவு ஒன்பது மணிக்குமேல் தமிழக காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஜெயலலிதா சமாதியில் சந்தித்துக் கொண்டார்கள். இதையடுத்து, அதிமுக-வின் இரண்டு கரங்களாக நானும் ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுவோம் என்று தீபா கூறி ஓ.பி.எஸ். ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து கிரின்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்ற தீபாவை ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார். தீபாவை அழைத்துச்சென்று, ‘நீ என் மகளைப் போன்றவள்’ என்று அன்பை பொழிந்து தீபாவுக்கு ஒரு வைர நெக்லஸை பரிசாகக் கொடுத்திருக்கிறார். அவரது அன்பில் கரைந்த தீபா அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.