சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும்; சொல்வது யார் தெரியுமா?

வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:00 IST)
சசிகலா, டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுக என்பது இல்லை என முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.


 

 
அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பை அடுத்து கட்சியின் ஒற்றுமைக்காகவும் தான் விலகிக் கொள்வதாக தினகரன் நேற்று அறிவித்தார். தினரகரனை ஆதரிப்பதற்காக காறி துப்பினாலும் துடைத்துக் கொள்வேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் நிலையில் உள்ளனர்.
 
இந்நிலையில் இன்று ரித்தீஷ், தினகரனை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதவது:-
 
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுடனேயே இருந்த சசிகலாவிற்கு மட்டுமே அவரது அணுகுமுறைகள் தெரியும். சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே கட்சியை நன்றாக வழிநடத்தி செல்ல முடியும், என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்