திருச்சியில் இருந்து, தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளுடன், சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி இன்று அதிகாலை வந்தது.
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால், அதில் பயணம் செய்த பயணிகள் பலர் தூக்கக் கலக்கத்தில் இருந்தனர். பலர் பேருந்து உள்ளேயே தூக்கிவீசப்பட்டனர். இதனால், அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றினர். ஆனால், யாரும் நல்வாய்ப்பாக பலியாகவில்லை. ஆனால், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தினுள் சிக்கிய பயணிகளை மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.