சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்; சமூக வலைதளத்தில் பரவிய புகைப்படம்; முதியவர் கைது

புதன், 24 ஆகஸ்ட் 2016 (20:54 IST)
சிறுமியிடம் சில்மிஷன் செய்த முதியவர், யாரோ ஒருவர் கண்ணில் சிக்க, அதை அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, அதைக்கொண்டு அந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.


 

 
தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மதியம், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் ஒரு முதியவர் சில்மிஷம் செய்துள்ளார்.
 
இதை பார்த்த யாரோ ஒருவர், அதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த படம் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்