இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ஈரப்பதம் நிரம்பிய காற்று தென் இந்திய பகுதியில் நிலவி பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.