தங்களுக்கு, 25 விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன், 2000க்கும் மேற்பட்டோருக்கு வாரிசு அடிப்படையில் வேலைகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. அவற்றை உடனே நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை வெறுமனே தொழிலாளர்களின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், தமிழக மக்களின் பிரச்சனையாகக் கருதி தமிழக அரசும், மத்திய அரசும் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.