ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிற்சங்க கூட்டமைப்பினர், சுற்றுப்புற கிராம மக்கள், அனைத்துக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த 53 நாள்களாக நடந்த போராட்டத்தின் போது 10 சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை, 6 சுற்று இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து ஒப்பந்தத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தமிழக முதலமைச்சசரை சந்தித்தும் முறையிட்டனர்.
இந்நிலையில், சென்னை சாஸ்திரி பவனில், துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் கந்தசாமி, உதவி ஆணையர் சிவராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்த 11 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.110 உயர்த்தி வழங்கவும், பணிக்கொடை, போனஸ் உள்ளிட்டவை வழங்கவும் நிர்வாக தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.