சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வருகின்ற சனி, ஞாயிறு கிழமைகளில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது 12 செ.மீ முதல் 24 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளை தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக 29ஆம் தேதி அன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அன்றைய நாளில் 12 செ.மீ. முதல் 24 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.