ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ணக்கொடியின் நடுவில் காமராஜர், மூப்பனார் ஆகியோரின் படங்களை கொண்டதாக அந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே. வாசன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அவருக்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.