குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் வாங்காமுடியாமல் போனது. இந்த நிலைக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா தான் காரணம் என கூறி, தேமுதிக நிர்வாகிகள் பலர் மாற்றுக்கட்சிக்கு தாவினர்.
இவர்களை தடுக்கும் வகையில், அவர்களின் மனைவிகளுக்குப் போன் போட்டு தேமுதிக கட்சி நம்ம கட்சி, அதை நீங்களும், நானும் தான் பலப்படு்த வேண்டும். எனவே, உங்க கணர்கிட்ட நீங்க தான் பக்குவமாக எடுத்துச் சொல்லணும் என்று சென்டிமெண்டாக சொல்லி டச் செய்து வருகிறாராம் பிரேமலா விஜயகாந்த். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம். இந்த தகவல் அறிந்த விஜயகாந்த் மிகவும் குஷியில் உள்ளாராம்.