நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினரும், கொள்கை பரப்பு செயலாளருமான வி.சி.சந்திரகுமார் தலைமையில் பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் தேமுதிக, திமுக உடன் கூட்டணி சேர வேண்டும் என இன்று மதியம் வரை விஜயகாந்திற்கு கெடு விதித்தனர். ஆனால் விஜயகாந்த் நேற்று மாலை 5.30 மணியளவில் அவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.