டெல்லி சிறப்பு பிரதிநதியாக ஏ.கே.எஸ். விஜயன் பொறுப்பேற்றார்

புதன், 16 ஜூன் 2021 (09:40 IST)
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் பொறுப்பேற்றுள்ளார்.

 
டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் தமிழக அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க டெல்லி வரவுள்ளார். அதற்கு முன்னதாக, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுள்ள ஏ.கே.எஸ். விஜயன், முதல்வரின் டெல்லி வருகைக்கான ஏற்பாடுகளை தமது முதல் பணியாக தொடங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்