அதாவது, வழக்கமாக புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து வங்கி கிளைகளுக்கு பணம் பிரித்து அனுப்பி வைக்கப்படும். ஆனால், புதிய ரூபாய் நோட்டுகள் அறிவிப்பின் காரணமாக, ஏராளமான வங்கிகளுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது.
எனவே சில வங்கி கிளைகளுக்கு அச்சகத்திலிருந்து நேரிடையாக பணம் அனுப்பப்பட்டது. அதன்படி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றுக்கு அனுப்பப்பட்ட பணத்தை, வங்கி அதிகாரிகள் நேரிடையாக அப்படியே சேகர் ரெட்டிக்கு அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.