இந்நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தால் அதைமாற்ற இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட அம்சங்கள் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஒருமனதாக இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.