தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ஆம் தேதி மதுரைக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகைக்கு பின்னரே கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முறைப்படி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.