நயன்தாராவிடம் விசாரணை நடத்திய விமான நிலைய அதிகாரிகள்: புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (15:00 IST)
பிரபல முன்னணி நடிகையான நடிகை நயன்தாராவிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக  இருந்த வருபவர் நயன்தாரா. இவர் மலேசியா சென்றிருந்தார்.
 
அப்போது அவரிடம் பாஸ்போர்ட்  தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
சமீபத்தில் விக்ரம் நடிக்கும் இரு முகன் படத்தின் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அதில் நயன்தாரா ரகசிய ஏஜெண்டாக வரும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
 
அந்த காட்சி மலேசிய விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. இந்நிலையில், நயன்தாராவிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
 
அது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படம் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையாகவே நயன்தாராவிடம் மலேசிய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்களா? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், நயன்தாராவிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை  நடத்தும் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்