காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருகிறார்: இளங்கோவன்

சனி, 19 டிசம்பர் 2015 (13:15 IST)
காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் நரேந்திர மோடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


 

 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது போடப்பட்ட நேசனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான பொய்யான வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திய மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட்டத்தில் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது.
 
நரேந்திர மோடி பலநாட்கள் வெளிநாட்டில்தான் உள்ளார். சில நாட்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கிறார்.
 
இந்தியாவில் இருக்கும் அந்த சில நாட்களிலும் மக்கள் நலப்பணி குறித்து சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
 
அரசியலை மூலதனமாக கொண்டு சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், நாட்டிற்காக தமது சொத்துக்களையே இழந்தவர்கள் நேரு குடும்பத்தினர்.
 
அத்தகைய நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி பேச நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை" என்று இளங்கோவன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்