நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தலும் ரெய்ட்

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (12:32 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

 
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
 
வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் தான் நமது அம்மா நாளிதழை சென்னையில் நடத்தி வருகிறார். இதனால் நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்