அடுத்த சர்ச்சையில் சிக்கினார் மு.க.ஸ்டாலின்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (05:45 IST)
நமக்குநாமே பயணத்தின் போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தை தமிழகம் முழுக்க நடத்தி வருகிறார். இந்த நிலையில், முதல் கட்ட பயணம் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பயணத்தை கரூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். அவர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, நொய்யல், மறவாபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் பயணம் செய்தார்.
 
அப்போது, மு.க.ஸ்டாலினைவிட அதிக வயது கொாண்ட பெண்கள் சிலர் அரவது காலில் விழுந்து வணங்கியுள்ளனர்.ஆனால், அவர்களை தடுக்காமல் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
 
இந்த விவகாரத்தை கையில் எடுத்த, ஆளும் கட்சி தரப்பு, தனது காலில் பெண்கள் விழுவதை மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்கிறார் என கொழுத்திப்போட்டுள்ளது.
 
ஏற்கனவே, நமக்கு நாமே பயணத்தின் போது, மெட்ரோ ரயில் செல்லும் போது அதில் வந்த பயணி ஒருவரை தாக்கிவிட்டார் என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அருகே ஆட்டோ டிரைவரை மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்த போது, அடித்து விட்டார் என்றும் புயல் கிளம்பியது. அந்த வரிசையில் இந்த விவகாரமும் தற்போது சேர்ந்து கொண்டது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்